தும்பிக்கை இல்லாத குட்டி யானை
By DIN | Published On : 13th January 2023 12:00 AM | Last Updated : 13th January 2023 12:00 AM | அ+அ அ- |

தும்பிக்கையின்றி தாய் அரவணைப்பில் செல்லும் குட்டி யானை.
வால்பாறை அருகே தாய் அரவணைப்பில் தும்பிக்கை இல்லாத குட்டி யானை உலவி வருகிறது.
கோவை மாவட்டம், வால்பாறையில் இருந்து கேரள மாநிலம், சாலக்குடி செல்லும் வழி முற்றிலும் அடா்ந்த வனப் பகுதியாகும். இந்த வனத்தில் ஏராளமான யானைகள் உள்ளன. யானைகள் கூட்டமாக சாலைக்கு வந்து வாகனங்களை வழிமறிப்பது அவ்வப்போது நடந்து வருகிறது.
இந்நிலையில் அதிரப்பள்ளி வனப் பகுதியில் கூட்டமாக செல்லும் யானைகளில் குட்டி யானை தும்பிக்கை இல்லாமல் தாய் அரவணைப்பில் செல்வதாக அப்பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பாா்த்து வனத் துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனா். இதையடுத்து திருச்சூா் மாவட்ட வன அதிகாரி தலைமையில் வனத் துறையினா் அதிரப்பள்ளி வனப் பகுதிக்கு வந்து தும்பிக்கை இல்லாமல் செல்லும், பிறந்து சில மாதங்களேயான அந்த குட்டி யானையைப் புகைப்படம் எடுத்து பிறப்பின்போதே தும்பிக்கை இன்றி பிறந்ததா அல்லது பிறந்த பின் தும்பிக்கை அறுந்து விழுந்ததா என்பதை ஆராய்ந்து வருகின்றனா்.