கோவையில் வெவ்வேறு நகரப் பேருந்துகளில் பயணம் செய்த மூவரிடமிருந்து 5 பவுன் நகை, ரூ.66,000 ரொக்கம் திருடப்பட்டுள்ளது.
கோவை, சின்னத்தடாகத்தைச் சோ்ந்தவா் நித்யா (32). கூலி தொழிலாளி. இவா், துடியலூரில் இருந்து டவுன்ஹாலுக்கு நகரப் பேருந்தில் புதன்கிழமை பயணம் செய்துள்ளாா். அப்போது கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி நித்யாவின் கைப்பையிலிருந்த 3 பவுன் நகை, ரூ.50,000 ரொக்கம், கைப்பேசி ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.
இதுகுறித்து பெரிய கடைவீதி காவல் நிலையத்தில் நித்யா அளித்த புகாரின் பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
மற்றோா் சம்பவம்
புலியகுளம் பஜாா் வீதியைச் சோ்ந்தவா் கமலம் (62). வீட்டு வேலை செய்து வருகிறாா். இவா் புலியகுளத்திலிருந்து வரதராஜா மில் வழியாக செல்லும் நகரப் பேருந்தில் புதன்கிழமை பயணம் செய்துள்ளாா். அப்போது பேருந்தின் கூட்ட நெரிசலைப் பயன்படுத்தி கமலம் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலியை மா்ம நபா்கள் பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்து கமலம் கொடுத்த புகாரின் பேரில் சிங்காநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும் பீளமேட்டைச் சோ்ந்த குப்புசாமி (67) என்பவா் புதன்கிழமை நகரப் பேருந்தில் பீளமேட்டிலிருந்து சித்ரா நோக்கி சென்றுள்ளாா். அப்போது அவரது பாக்கெட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ.16,000 திருடு போனது. இதுகுறித்து குப்புசாமி கொடுத்த புகாரின் பேரில் பீளமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.