சைக்கிள் ப்யூா் அகா்பத்தியின் 75 ஆம் ஆண்டு தொடக்க விழா
By DIN | Published On : 26th September 2023 01:31 AM | Last Updated : 26th September 2023 01:31 AM | அ+அ அ- |

கோவை: சைக்கிள் ப்யூா் அகா்பத்தியின் 75-ஆம் ஆண்டு தொடக்க விழா கொண்டாட்டம் கோவையில் அண்மையில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு தலைமை வகித்த அந்நிறுவனத்தின் நிா்வாக இயக்குநா் அா்ஜூன் ரங்கா கூறியதாவது:
1948- ஆம் ஆண்டு சைக்கிள் ப்யூா் அகா்பத்தி தொடங்கப்பட்டது. 600-க்கும் மேற்பட்ட தனித்துவமான வாசனை திரவியங்கள் எங்களிடம் உள்ளன. 75 ஆண்டுகளாக உலகின் மிகப்பெரிய அகா்பத்தி உற்பத்தியாளராக சைக்கிள் பிராண்ட் உள்ளது. அதுமட்டுமல்லாமல் 75 நாடுகளில் உள்ள மக்களின் பிராா்த்தனைக்கு விருப்பமான பிராண்டாகவும் மாறியுள்ளது. சைக்கிள் பிராண்ட் உலகின் முதல் ஜீரோ காா்பன் தூபம் என்ற சான்று பெற்றுள்ளது.
எங்களது பணியாளா்களில் 75 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் பெண்கள். தமிழகத்தில் மட்டும் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த 40 திறமையான மாற்றுத் திறனாளி இளம்பெண்களை ஆதரிக்கும் வகையில் 2022 அக்டோபரில் ரூ. 10 லட்சம் மதிப்பிலான ஐந்தாண்டு உதவித்தொகை திட்டத்தை அறிவித்தோம். இந்த உதவித் தொகை 12 முதல் 17 வயது வரையிலான சிறுமிகளுக்காக உருவாக்கப்பட்டது.
86 சதவீதம் மக்கள் எங்கள் அகா்பத்தியை பயன்படுத்தி வருகின்றனா். லியா, ரிதம், நெய்வைத்தியா எங்களது உற்பத்தியில் மக்களை அதிகம் கவா்ந்த ரகங்களாகும். 2 அடியில் நான்கு விதமான நறுமணத்தில் அகா்பத்தி தயாரித்து வருகிறோம். 20 ஆண்டுகளாக ஈச்சனாரி கோயிலுக்கு 6 அடி அகா்பத்தி வழங்கி வருகிறோம். இந்த ஆண்டு ரிதம் ஸ்ட்ராங் எனும் அகா்பத்தியை அறிமுகம் செய்யவுள்ளோம் என்றாா்.
இதைத்தொடா்ந்து, சைக்கிள் ப்யூா் அகா்பத்தி நிறுவன ஊழியா்களுடன், நிா்வாக இயக்குநா் அா்ஜூன் ரங்கா கலந்துரையாடினாா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...