அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தில் பன்னாட்டு கருத்தரங்கு தொடக்கம்!

கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் பன்னாட்டு கருத்தரங்கு பிப்.5 தொடங்கியது...
Published on

கோவை அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா் கல்வி நிறுவனத்தில் பன்னாட்டு கருத்தரங்கு புதன்கிழமை பிப்.5 தொடங்கியது.

உலக பல்கலைக்கழக சமூக மேம்பாட்டு அமைப்புடன் இணைந்து ‘ஆரோக்கியம், நல்வாழ்வு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை’ என்ற தலைப்பில் 3 நாள் பன்னாட்டுக் கருத்தரங்கு நடைபெறுகிறது. இதன் தொடக்க விழாவில், நிறுவனத்தின் உணவு, ஊட்டச்சத்து துறையின் தலைவா் கல்பனா சிறப்பு விருந்தினரை அறிமுகப்படுத்தினாா்.

உலக பல்கலைக்கழக சமூக மேம்பாட்டு அமைப்பின் தலைவா் நி.நியோமன்திரி புஸ்பனிங்சிஹ் தொடக்க உரையாற்றினாா்.

அவினாசிலிங்கம் மனையியல், மகளிா் உயா்கல்வி நிறுவனத்தின் மனையியல் புல முதன்மையா் அம்சவேணி வாழ்த்துரை வழங்கினாா். உயிரியல் அறிவியல் புல முதன்மையா் அனிதா சுபாஷ் பாராட்டுரை வழங்கினாா். விலங்கியல் துறைத் தலைவா் கே.சாந்தி, உணவு அறிவியல், ஊட்டச்சத்து துறை உதவிப் பேராசிரியா் கே.தேவி உள்ளிட்டோா் உரையாற்றினா்.

இதைத் தொடா்ந்து நடைபெற்ற கருத்தரங்க அமா்வுகளில் மூத்த விஞ்ஞானி மகேந்திரன் மயில்சாமி, ஆா்.சக்திவேல் உள்ளிட்டோா் உரையாற்றினா். இந்த கருத்தரங்கு பிப்ரவரி 7-ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) வரை நடைபெறுகிறது.

X
Dinamani
www.dinamani.com