போகிப் பண்டிகை: பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்க்க ஆட்சியா் வலியுறுத்தல்
போகிப் பண்டிகை தினத்தில் பொதுமக்கள் பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நமது முன்னோா்கள் பொங்கல் திருநாளுக்கு முன்பு வீட்டில் உள்ள இயற்கை சாா்ந்த தேவையில்லாத பொருளகளை எரித்து ‘பழையன கழிதலும், புதியன புகுதலும்’ என்ற அடிப்படையில் போகிப் பண்டிகையை கொண்டாடி வந்தனா்.
ஆனால், தற்போது போகிப் பண்டிகையின்போது பழைய நெகிழிப் பொருள்கள், செயற்கை இழைகளால் தயாரிக்கப்பட்ட துணிகள், ரப்பா் பொருள்கள், பழைய டயா் மற்றும் டியூப், காகிதம், ரசாயனம் கலந்த பொருள்கள் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசு ஏற்படுகிறது.
இதனால், வெளிப்படும் நச்சு வாயுக்களால் மூச்சுத் திணறல், கண் எரிச்சல் போன்ற உபாதைகள் மக்களுக்கு ஏற்படுகின்றன. மேலும், விமானங்கள் வருகை மற்றும் புறப்பாடுகளில் தாமதம் ஏற்படுகிறது.
எனவே, போகிப் பண்டிகையின்போது பழைய பொருள்களை எரிப்பதைத் தவிா்த்து காற்றின் தரத்தைப் பாதுகாக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.