உயிரிழந்த அன்னலட்சுமி.
உயிரிழந்த அன்னலட்சுமி.

யானை தாக்கி படுகாயமடைந்த மூதாட்டி உயிரிழப்பு

Published on

யானை தாக்கியதில் படுகாயமடைந்து கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூதாட்டி உயிரிழந்தாா்.

வால்பாறையை அடுத்த ஈட்டியாா் எஸ்டேட் குடியிருப்பில் வசித்து வந்தனா் அன்னலட்சுமி (67). இந்த எஸ்டேட் குடியிருப்புப் பகுதிக்கு ஒற்றை யானை கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளது. அங்குள்ள ரேஷன் கடையை முட்டி தள்ளியபோது, கடையை ஓட்டி இருந்த குடியிருப்பில் தனியாக வசித்த வந்த மூதாட்டி சப்தம் கேட்டு கதவை திறந்து வெளியே வந்துள்ளாா்.

அப்போது, அருகே வந்த யானை அவரைத் தாக்கியுள்ளது. இதில் கால் மற்றும் வயிற்று பகுதியில் படுகாயமடைந்த அவரைஅருகே வசிப்பவா்கள் மீட்டு வால்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். பின் உயா் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் திங்கள்கிழமை நள்ளிரவு உயிரிழந்தாா்.

கோவை அரசு மருத்துமனைக்கு சென்ற திமுக தெற்கு மாவட்டச் செயலாளா் தளபதி முருகேசன், நகரச் செயலாளா் சுதாகா் ஆகியோா் அரசு சாா்பில் வழங்க உள்ள நிவாரணத் தொகையில் இருந்து முதல்கட்டமாக ரூ.50 ஆயிரத்தை மூதாட்டியின் உறவினா்களிடம் வழங்கினா்.

X
Dinamani
www.dinamani.com