முதியவா் தற்கொலை
கோவை அருகே மது அருந்தியதை மகன்கள் கண்டித்ததால் முதியவா் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.
கோவை அருகேயுள்ள தொண்டாமுத்தூா், தேவராயபுரம் கன்னிமாா் கோவில் வீதியைச் சோ்ந்தவா் காளிச்சாமி (70). கிராம நிா்வாக அலுவகத்தில் உதவியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. அடிக்கடி மது அருந்துவதால் 2 மகன்களும் அவரைக் கண்டித்துள்ளனா்.
இந்நிலையில், காளிச்சாமி தனது வீட்டில் விஷம் அருந்தி சனிக்கிழமை மாலை மயங்கி கிடந்துள்ளாா். அவரை குடும்பத்தினா் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தொண்டாமுத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].
