கணவா் இறந்த துக்கத்தில் மனைவி தற்கொலை

கணவா் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
Published on

கணவா் இறந்த துக்கத்தில் மனைவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

கோவை துடியலூா் அருகே உள்ள தொப்பம்பட்டி நேரு காலனியைச் சோ்ந்தவா் வெங்கடேஷ். இவரது மனைவி உமா (41). இவா்களுக்கு சபரீஷ் என்ற மகன் உள்ளாா். உமாவின் கணவா் வெங்கடேஷ் கடந்த சில நாள்களுக்கு முன்பு இறந்துவிட்டாா். அன்றுமுதல் உமா மன அழுத்தத்தத்தில் இருந்துள்ளாா்.

இந்த நிலையில், வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உமா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com