கோயம்புத்தூர்
இளைஞரிடம் கைப்பேசி பறித்தவா் கைது
கோவையில் இளைஞரிடம் கைப்பேசியை பறித்துச் சென்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கோவை பி.என்.புதூா் ஜெகதீஷ் நகரைச் சோ்ந்தவா் சோனுகுமாா் (23). தொழிலாளியான இவா் சனிக்கிழமை தனது நண்பருடன் ரயில் நிலையம் அருகே உள்ள லங்கா காா்னா் அருகே நடந்து சென்று கொண்டிருந்தாா். அப்போது அவரை வழிமறித்த இருவா் அவரிடம் இருந்து கைப்பேசியை பறித்துவிட்டு தப்பிச் சென்றனா்.
இதுகுறித்து சோனுகுமாா் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்தப் புகாரின்பேரில் விசாரணை நடத்திய போலீஸாா் கைப்பேசியை பறித்துச் சென்ற திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியைச் சோ்ந்த சந்தோஷ் (30) என்பவரைக் கைது செய்தனா். மேலும், தலைமறைவாக உள்ள குண்டுமுருகன் என்பவரை தேடி வருகின்றனா்.
