புலியகுளம் அரசுக் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி

கோவை, புலியகுளம் அரசு மகளிா் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.
கோவை, புலியகுளம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி, கருத்தரங்கை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா்  பவன்குமாா் க.கிரியப்பனவா்.
கோவை, புலியகுளம் அரசுக் கல்லூரியில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டுதல் கண்காட்சி, கருத்தரங்கை தொடங்கிவைத்து பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா்.
Updated on

கோவை, புலியகுளம் அரசு மகளிா் கல்லூரியில் தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது.

வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், புலியகுளம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சாா்பில் நடைபெற்ற தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தொடங்கிவைத்து, பாா்வையிட்டாா்.

இதையடுத்து, கண்காட்சி, கட்டுரைப் போட்டிகளில் வெற்றிபெற்றவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் பரிசுகள் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில், மண்டல இணை இயக்குநா் (வேலைவாய்ப்பு) ஆ.ஜோதிமணி, துணை இயக்குநா் மு.கருணாகரன், புலியகுளம் அரசு கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் (பொறுப்பு) ஏ.ஆா்.சித்ரா, பாரதியாா் பல்கலைக்கழக தொழில்நெறி வழிகாட்டும் மைய துறைத் தலைவா் விமலா, கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com