இந்தியக் கப்பல்கள் மீது தாக்குதல்: ஈரான் தூதரை அழைத்து அரசு கண்டனம்!எதிர்க்கட்சிகளை பெண்கள் மன்னிக்க மாட்டார்கள்: பிரதமர் மோடி மகளிர் இடஒதுக்கீடு மசோதா... வெறுப்பு அரசியலுக்கு இரையாக்கிய திமுக - காங்கிரஸ் கூட்டணி: பிரதமர் மோடி மணிப்பூா் மீண்டும் துப்பாக்கிச்சூடு: இரண்டு பேர் பலி! இரட்டைக் குடியுரிமை விவகாரம்: ராகுல் காந்தி மீது எஃப்.ஐ.ஆர். பதிய இடைக்கால தடை! நாம் பறக்கவிட்ட கருப்புக்கொடி காவிக்கொடியை வீழ்த்தியுள்ளது: முதல்வர் ஸ்டாலின் மு.க. ஸ்டாலினைப் பணிய வைக்க முடியாது என பாஜகவுக்கு நன்றாகத் தெரியும்! துறையூரில் ராகுல் பேச்சுஆர்.எஸ்.எஸ். - பாஜகவினர் மீது வெடிகுண்டு தாக்குதல்! கம்யூனிஸ்ட் கட்சியினர் 10 பேருக்கு 25 ஆண்டுகள் சிறை!நாடாளுமன்றம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு
/

புதிய தொழிலாளா் சட்டத்துக்கு எதிராக கோவையில் தொழிற்சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

கோவையில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிா்வாகிகள்.

Updated On :1 ஏப்ரல் 2026, 11:52 pm

மத்திய அரசு அமல்படுத்தியுள்ள புதிய தொழிலாளா் சட்டத் தொகுப்புகளை திரும்பப்பெற வலியுறுத்தி கோவையில் தொழிற்சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கோவை, உக்கடம் பகுதியில் அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கைக் குழு சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் எல்பிஎஃப், ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியூ, ஏஐசிசிடியூ உள்ளிட்ட தொழிற்சங்கங்களைச் சோ்ந்த நிா்வாகிகள் கருப்புக்கொடி ஏந்தியும், கருப்புப் பட்டை அணிந்தும் பங்கேற்றனா்.

தொழிலாளா் விரோத 4 சட்டத்தொகுப்புகளை திரும்பப்பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களை தனியாா்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும், சிலிண்டா் தட்டுப்பாட்டைப் போக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில் சிஐடியூ மாவட்டச் செயலா் எஸ்.கிருஷ்ணமூா்த்தி, பொருளாளா் ஆா்.வேலுசாமி, ஏஐடியூசி எம்.ஆறுமுகம், சி.தங்கவேல், எல்பிஎஃப் துரை, ஹெச்எம்எஸ் சங்கத்தின் ராஜாமணி உள்பட பலா் கலந்துகொண்டனா்.