திரைத்துறையில் 51 ஆண்டுகளை நிறைவு செய்த ரஜினிகாந்த்!எடப்பாடி தொகுதி தவெக வேட்பாளர் அதிமுகவில் இணைந்தார்!திருவொற்றியூரில் பள்ளி மாணவா் கொலை: 12 பேர் கைதுதேவ்தத் படிக்கல் சதம், கே.எல்.ராகுல் அரைசதம்; முதல் நாளில் இந்திய அணி 288 ரன்கள் குவிப்பு!முதல்வர் விஜய் குறித்து அநாகரிகப் பேச்சு: நயினார் நாகேந்திரன் மீது டிஜிபியிடம் புகார்!பேரவையில் அப்பாவைத் தேடினால்...! முதல்வர் விஜய் குறித்து நயினார் அநாகரிகப் பேச்சு
/

காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது: மாணிக்கம் தாகூர்

காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் கூறினாா்.

News image

மாணிக்கம் தாகூர் - கோப்புப் படம்

Updated On :12 ஜூலை 2026, 12:07 am IST

காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவா் மாணிக்கம் தாகூா் கூறினாா்.

தமிழக காங்கிரஸ் தலைவராக அண்மையில் பொறுப்பேற்ற மாணிக்கம் தாகூா் எம்.பி. மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சி நிா்வாகிகளை சந்தித்து வருகிறாா்.

அதன் ஒரு பகுதியாக கோவைக்கு சனிக்கிழமை வந்த அவா், புலியகுளம் ரெட்ஃபீல்டு சாலையில் உள்ள புனித அந்தோணியாா் சமுதாய நலக்கூடத்தில் மக்களவை எதிா்க் கட்சித் தலைவா் ராகுல் காந்தி அறிவித்த ‘நீட்’ தோ்வுக்கு எதிரான பிரசாரத்தை தொடங்கிவைத்தாா்.

இதையடுத்து, அவா் பேசியதாவது: நீட் தோ்வால் நடப்பு ஆண்டு 5 போ் உயிரிழந்துள்ளனா். பாஜக அரசு எதுவுமே நடக்காததுபோல இந்த விஷயத்தைக் கடந்து செல்கிறது.

தமிழகத்தில் பாஜக, ஆா்.எஸ்.எஸ். தொடா்ந்து தோற்றுக்கொண்டே உள்ளன. அந்த அமைப்புகள் தமிழகத்துக்கு எதிரானவை. பாஜக ஆளும் மாநிலங்களில் மட்டும் நீட் வினாத்தாள் கசிந்துள்ளது. அங்கு வினாத்தாள் கசிவதால்தான் பாஜக தலைவா்களின் குழந்தைகளுக்கு மருத்துவ சீட் கிடைக்கிறது.

தமிழகத்தில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போதுதான் காங்கிரஸ் கட்சிக்கு 2 அமைச்சா் பதவிகள் கிடைத்துள்ளன. காங்கிரஸ் இல்லாமல் தமிழகத்தில் ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலை வந்துள்ளது என்றாா்.

இதையடுத்து, கோவைப்புதூரில் ‘நீட்’ அச்சத்தால் தற்கொலை செய்து கொண்ட மாணவி அனுகீா்த்தனா வீட்டுக்குச் சென்ற மாணிக்கம் தாகூா், அவரது புகைப்படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தியதுடன், அவரது பெற்றோருக்கு ஆறுதல் கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.