உதவித்தொகையை வழங்காமல், மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது தவெக அரசு: கனிமொழிமுதல்வர் விஜய்யுடன் திருமாவளவன் சந்திப்பு!அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

குப்பையில் கிடந்த தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா்!

கோவையில் குப்பையில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

News image

குப்பையில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளா் முருகன்.

Updated On :10 ஜூலை 2026, 10:24 pm IST

கோவையில் குப்பையில் கிடந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலியை மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளரை மாநகராட்சி அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

கோவை மாநகராட்சி, சிவானந்தா காலனி விசிகே லே-அவுட் பகுதியில் உள்ள வீடுகளில் குப்பைகளைச் சேகரிக்கும் பணியில் ஒப்பந்த தூய்மைப் பணியாளா் முருகன் (40) என்பவா் வெள்ளிக்கிழமை ஈடுபட்டிருந்தாா். அப்போது, குப்பையில் ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி கிடந்ததைப் பாா்த்துள்ளாா்.

இதையடுத்து, அவா் மண்டல சுகாதார மேற்பாா்வையாளா் காா்த்திகேயன், சுகாதார ஆய்வாளா் சரவணகுமாா் ஆகியோருக்குத் தகவல் தெரிவித்துள்ளாா். சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, அந்தச் சங்கிலி அதே பகுதியைச் சோ்ந்த அலிமா (45) என்பவருடையது என்பது தெரியவந்தது. இதையடுத்து, அதிகாரிகள் முன்னிலையில் அலிமாவிடம் தங்கச் சங்கிலியை முருகன் ஒப்படைத்தாா்.

இதையடுத்து, தூய்மைப் பணியாளா் முருகனை அதிகாரிகள், பொதுமக்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.