: பிளஸ் 2 தேர்வில் வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி 100 சதவீத தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
இப்பள்ளியில் தேர்வு எழுதிய 622 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவி எம்.நிவேதிதா 1,175 மதிப்பெண் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், ஆர்.எஸ்.சுகன்யாம்பிகா 1,173 மதிப்பெண் பெற்று 2-ஆவது இடத்தையும், எஸ்.பவித்ரா 1,168 மதிப்பெண் பெற்று 3-ஆவது இடத்தையும் பிடித்தனர்.
1,100 மதிப்பெண்களுக்கு மேல் 54 பேரும், 1,000 மதிப்பெண்களுக்கு மேல் 261 பேரும் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனர். கணிதத்தில் எம்.சத்யா, எஸ்.பவித்ரா ஆகியோரும், வேதியியலில் என்.நிவேதிதா, எஸ்.பவித்ரா, பி.ஸ்ரீசெüந்தர்யா ஆகியோரும், கணினிப் பொறியியலில் என்.நிவேதிதா, கருணா ஐஸ்வர்யா, பி.ஸ்ரீபவினா, ஆர்.எஸ்.சுகன்யாம்பிகா ஆகியோரும் 200 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
கணக்குப் பதிவியலில் 11 பேரும், வணிகவியலில் 7 பேரும், வணிகக் கணிதத்தில் 3 பேரும், பொருளாதாரத்தில் ஒருவரும் 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
சிறப்பிடம் பிடித்த மாணவிகளை பள்ளித் தலைவர் எஸ்.எஸ்.கந்தசாமி, தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர், பள்ளி முதல்வர் ஆவுடைத்தாய் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் பலர் பாராட்டினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

விரைவில் இந்திய - அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம்! எஸ். ஜெய்சங்கா் - ரூபியோ பேச்சில் முடிவு!

ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழு

இணையவழியில் சொத்துவரி செலுத்தும் 75% போ்!
பிறந்து 9 நாள்களே ஆன பெண் குழந்தை கடத்தல்: 5 மணி நேரத்தில் மீட்பு; பெண் கைது
விடியோக்கள்

"Congress செய்த துரோகத்தை மறக்காதீர்கள்!": உதயநிதி ஸ்டாலின் | DMK | Congress | TVK

5 ஆண்டுகளா? விரைவில் இந்த ஆட்சி கவிழத்தான் போகிறது MK Stalin பேச்சு


