பவானி ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழு, வட்ட சட்டப் பணிகள் குழு இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு முகாமை புதன்கிழமை நடத்தின.
இம்முகாமுக்கு ஈரோடு முதன்மை மாவட்ட நீதிபதி பி.முருகன் தலைமை வகித்தார். பவானி சார்பு நீதிமன்ற நீதிபதியும், வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவருமான என்.ராமநாதன் வரவேற்றார். பவானி முதலாம் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி எஸ்.லட்சுமி, பவானி குற்றவில் நீதித் துறை நடுவர் பி.ராஜா முன்னிலை வகித்தனர். இதில், சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விளக்கிப்பட்டதோடு, நீதிமன்ற வளாகத்தில் மரக்கன்றுகளும் நடப்பட்டன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.