கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறப்பு: விலையில்லா நோட்டு, புத்தகங்கள் விநியோகம்

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.
Updated on
1 min read

ஈரோடு மாவட்டத்தில் கோடை விடுமுறைக்குப் பிறகு புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன. அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா நோட்டு, புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டன.
அரசுத் தொடக்கப் பள்ளிகளில்  ஏப்ரல் 22-ஆம் தேதி,  உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏப்ரல் 14-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், புதன்கிழமை பள்ளிகள் திறக்கப்பட்டன.
பள்ளி முதல் நாள் என்பதால் உற்சாகத்துடன்  மாணவ, மாணவிகள் பள்ளிகளுக்கு வந்திருந்தனர். அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு அரசு சார்பில் விலையில்லா நோட்டு, புத்தகங்கள், இரண்டு ஜோடி விலையில்லா சீருடைகள், காலணிகள் வண்ண பென்சில்கள், பாக்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com