அந்தியூரில்  மர்மக் காய்ச்சல்: 4 மாத பெண் குழந்தை சாவு

அந்தியூர் அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் 4 மாத பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
Published on
Updated on
1 min read

அந்தியூர் அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் 4 மாத பெண் குழந்தை புதன்கிழமை உயிரிழந்தது.
அந்தியூர், ஆலம்பாளையத்தைச் சேர்ந்தவர்கள் சதீஷ் - ஸ்ரீதேவி தம்பதி. இவர்களது 4 மாத பெண் குழந்தை கனிகா காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். கனிகாவுக்கு கடந்த சில நாள்களாக அந்தியூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. காய்ச்சல் குணமாகாததால் ஈரோடு அரசு மருத்துமனையில் சேர்க்கப்பட்டார்.
பின்னர்,  உயர் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் கனிகா புதன்கிழமை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com