பவானி அருகே மர்மக் காய்ச்சலுக்கு சிறுவன் சாவு

பவானி அருகே பெருமாள் மலைப் பகுதியில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட  6 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தான்.
Published on
Updated on
1 min read

பவானி அருகே பெருமாள் மலைப் பகுதியில் மர்மக் காய்ச்சல் பாதிப்பால் பாதிக்கப்பட்ட  6 வயது சிறுவன் புதன்கிழமை உயிரிழந்தான்.
பெருமாள் மலை, பெரியார் வீதியைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மகன் தீபக் (6). கடந்த சில நாள்களாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த தீபக், பவானி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தான்.
இதையடுத்து, உயர் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டான்.  ஆனால், அங்கு அவன் புதன்கிழமை உயிரிழந்தான்.
பவானி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் மர்மக் காய்ச்சலால் உயிரிழப்புகள் அதிகரித்து வருவது பொது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com