கோடை வெயிலின் தாக்கத்தைக் குறைக்க சென்னிமலை முருகன் மலைக் கோயில் நடைபாதையில் அடர் வண்ணம் பூசப்பட்டுள்ளது.
சென்னிமலை முருகன் கோயிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் பக்தர்களும் அதிக அளவில் வந்து செல்கின்றனர். இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்களில் வரும் பக்தர்கள், வாகனங்களை நிறுத்திவிட்டு வெகு தூரம் நடக்க வேண்டும். இந்த இடத்தில் தார் சாலை வெட்ட வெளியாக உள்ளதால் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது பக்தர்கள் நடப்பதற்கு கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
இதையடுத்து, கோயில் நிர்வாகம் சார்பில் வெயிலின் தாக்கத்தைக் கட்டுப்படுத்தும் வகையில், அடர் வெள்ளை வண்ணம் நடைபாதையில் பூசப்பட்டுள்ளது.