பாபர் மசூதி இடிப்பைக் கண்டித்து முஸ்லிம் அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.

பாபர் மசூதி இடிக்கப்பட்டதைக் கண்டித்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகளின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
முஸ்லிம் அமைப்புகள், கட்சிகள் சார்பில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 6 ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு நாளாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக, ஈரோடு கருங்கல்பாளையம் காந்திசிலை அருகில், சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சி  சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் முகமதுஹசன்அலி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் முகமது லுக்மானுல் ஹக்கீம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக தொழிற்சங்க மாநில தலைவர் கோவை பாரூக் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர் ஹசன்பாபு, மாவட்ட தலைவர் உபைதுல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மண்டல செயலாளர் விநாயகமூர்த்தி, தமிழ் புலிகள் கட்சி மாவட்ட செயலாளர் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில், ஈரோடு கிழக்கு மாவட்டம் சார்பில் ஈரோடு - சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் சித்திக் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் மீரான் முன்னிலை வகித்தார். மனிதநேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் ஜெய்னுல் ஆபிதீன், தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர்.
இதில், மாவட்டச் செயலாளர் சலீம், ஐ.யு.எம்.எல். மாவட்ட தலைவர் நூர்சேட், மாவட்ட துணைத் தலைவர் அமீர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கமிட்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com