ஒருங்கிணைந்த நிதி, மனித வள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக கோவை மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டம் ஈரோட்டில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சி.கதிரவன் முன்னிலையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்துக்கு, தமிழக அரசு கருவூலம், கணக்குத் துறையின் முதன்மைச் செயலர், ஆணையர் தென்காசி சு.ஜவஹர் தலைமை வகித்துப் பேசினார்.
ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தை கோவை மண்டலத்தில் செயல்படுத்துவது குறித்த முன்னேற்ற அறிக்கையை ஆய்வு செய்து ஆலோசனைகளைத்
தெரிவித்தார்.
இதில், கருவூலக் கணக்குத் துறை கூடுதல் இயக்குநர் ஏ.பி.மஹாபாரதி, கோவை மண்டல இணை இயக்குநர் டி.செல்வசேகர், கருவூலக் கணக்குத் துறையின் கோவை மண்டலத்தில் உள்ள கோவை, ஈரோடு, திருப்பூர், உதகை, கரூர் மாவட்ட கருவூல அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.