மின் கம்பி மீது வைக்கோல் பாரம் உரசி தீ விபத்து

அந்தியூர் அருகே அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி மீது உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. 

அந்தியூர் அருகே அளவுக்கு அதிகமாக வைக்கோல் பாரம் ஏற்றிச் சென்ற டிராக்டர் மின் கம்பி மீது உரசியதால் தீ விபத்து ஏற்பட்டது. 
கோபி பகுதியிலிருந்து கால்நடைகளுக்குத் தேவையான வைக்கோலை ஏற்றிக் கொண்டு  டிராக்டர் அந்தியூர் நோக்கி செவ்வாய்க்கிழமை சென்று கொண்டிருந்தது. அந்தியூர் - பர்கூர் சாலையில் மூலக்கடையை அடுத்த பனங்கொறை அருகே சென்றபோது, வைக்கோலில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதையடுத்து, ஓட்டுநர் டிராக்டரை நிறுத்திவிட்டு தப்பிச் சென்றார்.  
இதுகுறித்த தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த அந்தியூர் தீயணைப்புப் படையினர் வைக்கோலில் பிடித்த தீயை அணைத்தனர். இதில், வைக்கோல் முற்றிலும் எரிந்து சாம்பலானதோடு, டிராக்டருக்கும் லேசான சேதம் ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com