கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 317 க்கு நிலக்கடலை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கொடுமுடி வட்டாரப் பகுதிகளிலிருந்து விவசாயிகள் 93 மூட்டைகளில் நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக ரூ. 51.16 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 42.06 க்கும் விற்பனையானது. மொத்தம், ரூ. 1 லட்சத்து 35 ஆயிரத்து 317 க்கு நிலக்கடலை விற்பனை நடைபெற்றது.