ஈரோடு
சாலை விபத்தில் மூதாட்டி சாவு
மொடக்குறிச்சியை அடுத்த அவலூரில் நேரிட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
மொடக்குறிச்சியை அடுத்த அவலூரில் நேரிட்ட சாலை விபத்தில் மூதாட்டி உயிரிழந்தார்.
மொடக்குறிச்சியை அடுத்த கண்டிக்காட்டுவலசு பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65). கூலித் தொழிலாளி. இவரது மனைவி துளசிமணி (60). இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் கண்டிக்காட்டுவலசிலிருந்து எழுமாத்தூர் நோக்கி செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, அவலூர் பகவதியம்மன் கோயில் அருகே சென்று கொண்டிருந்தபோது, இவர்களுக்குப் பின்னால் வந்த சரக்கு வாகனம் மோதியதில் துளசிமணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த சுப்பிரமணி 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சரக்கு வாகன ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.