12 இல் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான  15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவர்கள் பங்குபெறும்

ஈரோடு மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான  15 வயதுக்கு உள்பட்ட பள்ளி மாணவர்கள் பங்குபெறும் பள்ளிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டி நவம்பர் 12 முதல் 24 ஆம் தேதி வரை ஈரோடு, சின்னியம்பாளையம் மைதானத்தில் நடைபெற உள்ளது. 
இதுகுறித்து, மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலாளர் ஜாபர் ஆசிக் அலி தெரிவித்ததாவது: 
பள்ளிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டிகள் 25 ஓவர்கள் அடிப்படையில் லீக், நாக்அவுட் முறையில் நடைபெற உள்ளது. மாவட்டத்தில் உள்ள தேர்வு செய்யப்பட்ட 13 பள்ளிகள் பங்குபெற  உள்ளன.
இதில், வெற்றி பெறும் பள்ளிகளுக்கு சுழற்கோப்பையும், ஒவ்வொரு போட்டிகளுக்கும் ஆட்டநாயகன் பரிசும், சிறந்த பந்து வீச்சாளர், சிறந்த மட்டையாளர், சிறந்த ஆல்ரவுண்டர் என சிறப்புப் பரிசுகளும் வழங்கப்படும்.
மேலும், இதில் சிறப்பாக விளையாடும் மாணவர்களைத் தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு ஈரோடு மாவட்ட அணிக்காக பங்குபெற வாய்ப்பு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com