இன்று நியாயவிலைக் கடை தொடர்பான குறைகேட்பு முகாம்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள்

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தின்கீழ் உணவுப் பொருள்கள் வழங்குதல் தொடர்பாக மக்கள் குறைகேட்பு முகாம் சனிக்கிழமை (அக்டோபர் 13) பின்வரும் வட்டங்களைச் சேர்ந்த கிராமங்களில் நடைபெறுகிறது. 
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டங்களிலும் சனிக்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்களால் நடத்தப்படவுள்ளது.
அதன்படி, ஈரோடு வட்டம், எல்லப்பாளையம் நியாய விலைக் கடை, பெருந்துறை வட்டமம் திருவாச்சி கிராம ஊராட்சி அலுவலகம், பவானி வட்டம், சலங்கபாளையம், அப்பிச்சிமார் கோயில் வளாகம், கோபிசெட்டிபாளையம் வட்டம், அண்ணா நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம்.
சத்தியமங்கலம் வட்டம், கெம்பநாயக்கன்பாளையம்    தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், அந்தியூர் வட்டம், எண்ணமங்களம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம், மொடக்குறிச்சி வட்டம், விளக்கேத்தி நியாயவிலைக் கடை, கொடுமுடி வட்டம், வள்ளிபுரம் கிராம ஊராட்சி சேவை மைய கட்டடம், தாளவாடி வட்டம், மரூர் அரசு துவக்கப் பள்ளி, நம்பியூர் வட்டம், வரப்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க வளாகம் ஆகிய இடங்களில் நடைபெறும் குறைகேட்பு முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள், குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று தங்களுக்கான குறைகளை  நேரிலும், மனுவாகவும் அளித்து உரிய  தீர்வைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com