இரு தரப்பினரிடையே மோதல்: 13 பேர் கைது

சத்தியமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

சத்தியமங்கலம் அருகே இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலில் 13 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
சத்தியமங்கலம் அருகே கொண்டப்பநாயக்கன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பழனியப்பா(52). அதே பகுதியைச் சேர்ந்தவர் சென்னா (50). பக்கத்து வீட்டுக்காரர்களான இவர்கள் இருவருக்கும் ஏற்கெனவே பிரச்னை இருந்து வந்துள்ளது.
இந்நிலையில், பழனியப்பா தனது வீட்டுக்கு வெளியே உள்ள பஞ்சாயத்து சாக்கடையை அடைத்து வைத்துள்ளார். இதனால், அண்மையில் பெய்த கனமழையில் தண்ணீர் வெளியேற முடியாமல் சென்னா என்பவரது வீட்டுக்குள் புகுந்துள்ளது. இதையடுத்து, ஊர் பெரியவர்கள் அனைவரும் சென்று பழனியப்பாவிடம் சாக்கடையை அடைத்து வைக்காமல் திறந்துவிட வேண்டும் எனக் கூறியுள்ளனர். ஆனால், சாக்கடையைத் திறந்துவிடாமல் சென்னாவின் வீட்டுக்கு ஆள்களை அனுப்பி அவரது மகளிடம் தகாத முறையில் நடந்துள்ளனர். இதனால், இருதரப்புக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இந்த மோதலில் சென்னா, அவரது மகன், மனைவி ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் பழனியப்பாவும் தனக்கு அடிப்பட்டதாகக் கூறி அரசு மருத்துவமனையில் சேர்ந்துள்ளார். தகவலறிந்த சத்தியமங்கலம் போலீஸார், மருத்துவமனைக்குச் சென்று இருவரிடமும் புகார் பெற்று இருதரப்பைச் சேர்ந்த சுமார் 13 பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com