ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் பல்வேறு பிரிவுகளுக்கு புதிய நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து, ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் மக்கள் ஜி.ராஜன் வெளியிட்ட தகவல்:
பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட ஊத்துக்குளி, குன்னத்தூர் ஆகிய பேரூராட்சிப் பகுதிகள், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப்பட்டுள்ளதால், அப்பகுதிகளுக்கு மாநில காங்கிரஸ் தலைமை ஒப்புதலுடன் பின்வரும் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஊத்துக்குளி தெற்கு வட்டாரத் தலைவராக வி.வி.சர்வேஸ்வரன், வடக்கு வட்டாரத் தலைவராக எம்.சி.பழனிசாமி, ஊத்துக்குளி பேரூராட்சிப் பகுதி தலைவராக வேலவன் ரங்கசாமி, குன்னத்தூர் பேரூராட்சிப் பகுதி தலைவராக கே.ஏ.சந்திரன் ஆகியோரும், மாவட்ட துணைத் தலைவர்களாக குப்புசாமி, செந்தில்குமார், முருகசாமி, மாவட்ட பொதுச் செயலாளர்களாக குப்புராஜ், ராஜ்குமார், காளிதாஸ், மாவட்ட செயலாளர்களாக செல்வபாரதி, சுப்பிரமணியன், பொன்னுசாமி ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய நிர்வாகிகளுக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.