திமுக தகவல்  தொழில்நுட்பப் பிரிவு ஆலோசனை

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஈரோடு வடக்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட செயலாளர் என்.நல்லசிவம் தலைமை வகித்தார். இதில், 4 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 14) காலை 9 மணிக்கு  ஆலோசனைக் கூட்டம் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.
அதன்படி, அக்டோபர் 14 இல் அந்தியூர் சட்டப் பேரவைத் தொகுதியில் அத்தாணி எஸ்.எம்.பி. மஹாலில் காலை 9 மணிக்கும், பகல் 1 மணிக்கு பவானி தொகுதியில் அனுசுயா பிரசவ விடுதி அருகே உள்ள சந்திரா முத்துவேல் அரங்கிலும், பிற்பகல் 3 மணிக்கு பவானிசாகர் தொகுதியில் சத்தியமங்கலம், கோபி  பிரதான சாலையில் உள்ள செட்டிநாடு ரெஸ்டாரண்ட் அரங்கிலும், மாலை 5 மணிக்கு கோபி தொகுதியில் அரசு மருத்துவமனை அருகே அன்பு மஹாலிலும் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டங்களில், ஒன்றிய, நகர, பேரூர், ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஒருங்கிணைப்பாளர்கள் அவசியம் கலந்துகொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com