பெருந்துறை அருகே லாரியை முந்திச் செல்ல முயன்ற கார், லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில், காரில் பயணம் செய்த ஒருவர் உயிரிழந்தார். 3 பேர் காயமடைந்தனர்.
சென்னை, கொளப்பாக்கம், நாராயண நகரைச் சேர்ந்தவர் தாமோதரன் (75). இவர், தன் மனைவி ராதா, மகன் தேவராஜ் (45), மகள் தீபா (36) ஆகியோருடன் கேரளத்துக்கு காரில் சென்றார். காரை தேவராஜ் ஓட்டிச் சென்றார்.
பெருந்துறை அருகே சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தபோது, முன்னால் சென்ற லாரியை கார் முந்திச் செல்ல முயன்றுள்ளது. அப்போது, எதிர்பாராமல் லாரியின் பக்கவாட்டில் மோதி கார் விபத்துக்குள்ளானது. இதில், தாமோதரன் உயிரிழந்தார். ராதா, தேவராஜ், தீபா ஆகியோர் பலத்த காயங்களுடன் பெருந்துறையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறிந்து, பெருந்துறை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.