ஈரோடு மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட மின் நுகர்வோருக்கான குறைகேட்புக் கூட்டம் புதன்கிழமை (செப்டம்பர் 12) நடைபெறுகிறது.
ஈரோடு, 948 - ஈ.வி.என். சாலை, மின் கோட்ட அலுவலகத்தில் மேற்பார்வைப் பொறியாளர் த.ராஜேந்திரன் தலைமையில், காலை 11 மணிக்கு நடைபெறும் இம்முகாமில் மின் நுகர்வோர் பங்கேற்று தங்களது குறைகள், கோரிக்கைகளுக்குத் தீர்வு பெறலாம் என மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.