பவானியை அடுத்த கவுந்தப்பாடியில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
சித்தோடு அருகே உள்ள எல்லீஸ்பேட்டை பாரதிதாசன் கலை அறிவியல் கல்லூரியின் கணினி அறிவியல் துறை மற்றும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, கல்லூரித் தாளாளர் என்.கே.கே.பெரியசாமி, பொருளாளர் வி.ஆர்.முருகன், இணைச் செயலர்கள் வசந்தி சத்யன், பரிமளா ராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கல்லூரி முதல்வர் ஆர்.சண்முகன் தலைமையில் தேர்தலில் வாக்களிக்கக் கோரி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், 18 வயது நிரம்பிய அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவ, மாணவிகள், அலுவலர்கள் பங்கேற்றனர்.