சென்னிமலை வட்டாரத்துக்கு உள்பட்ட கிராமங்களில் ஈரோடு தொகுதி திமுக கூட்டணி வேட்பாளர் கணேசமூர்த்தி புதன்கிழமை வாக்கு சேகரித்தார்.
திமுக கூட்டணியில், ஈரோடு தொகுதியில் மதிமுக சார்பில் வேட்பாளர் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்.
இவரை ஆதரித்து சென்னிமலை வட்டாரத்தில் உள்ள கிராமங்களில் கூட்டணிக் கட்சியினர் புதன்கிழமை தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
இப்பிரசாரம் நொய்யல் பகுதியில் பிரசாரம் துவங்கி பசுவபட்டி, வெப்பிலி, ராமலிங்கபுரம், கொடுமணல், இச்சிப்பட்டி மற்றும் சுற்று வட்டாரத்தில் உள்ள 25 கிராமங்களில் நடைபெற்றது .
இதில், திமுக மாநில இளைஞரணிச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான மு.பெ.சாமிநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமார் மன்றாடியார், மதிமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளர் சுப்ரமணியம் , சென்னிமலை திமுக ஒன்றியப் பொறுப்பாளர் செல்வம், பேரூர் கழக செயலாளர் ராமசாமி, பொதுக்குழு உறுப்பினர் மெய்யப்பன், மதிமுக ஒன்றியப் பொறுப்பாளர் துரைசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் பொன்னுசாமி, காங்கிரஸ் வட்டார தலைவர் சிவக்குமார் உள்ளிட்ட கூட்டணிக் கட்சியின் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர உடனிருந்தனர்.