பவானி தேவபுரம் பத்ரகாளியம்மன் கோயில் திருவிழா

பவானி தேவபுரம் பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

பவானி தேவபுரம் பத்ரகாளியம்மன் கோயில் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
இதையொட்டி, மார்ச் 19 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா தொடங்கியது. இதையடுத்து, தினந்தோறும் அபிஷேகம், ஆராதனை வழிபாடுகள் நடைபெற்றன. மார்ச் 26 ஆம் தேதி கம்பம் நடுதல், கம்பத்துக்கு புனித நீர் ஊற்றுதல் நடைபெற்றது.
இதைத் தொடர்ந்து, பவானி கூடுதுறையில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக தீர்த்தம் எடுத்து வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் பொங்கல் வைத்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை வழிபாடு புதன்கிழமை நடைபெற்றது. 
இதில், மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் எஸ்.எஸ்.சித்தையன், கே.கே.விஸ்வநாதன் உள்பட திரளான பக்தர்கள் பங்கேற்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com