கூடலூர் நகர வீதிகளில் அதிமுக வேட்பாளர் எம்.தியாகராஜன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தார்.
கூடலூர் வந்த நீலகிரி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் தியாகராஜனுக்கு மேல்கூடலூர் பகுதியில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல்கூடலூர் குடியிருப்பு பகுதி, நடுகூடலூர், ஹெல்த்கேம்ப் வழியாக ஓவேலி பகுதிக்குச் சென்றார். ஓவேலி பகுதியிலுள்ள கிராமங்களில் வாக்கு சேகரித்துவிட்டு கூடலூருக்கு வந்த அவர் ராஜகோபாலபுரம் பகுதியிலிருந்து முக்கிய சாலைகள் வழியாக வியாபரிகள், பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். பிறகு பழைய பேருந்து நிலைய சந்திப்பில் வாகனப் பிரசாரம் மேற்கொண்டார்.