மக்களவைத் தேர்தலில் 100 சதவிகித வாக்களிப்பை வலியுறுத்தி நம்பியூர் வட்டத்துக்கு உள்பட்ட கிராமங்களில் விழிப்புணர்வுப் பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஈரோடு மாவட்ட உழவர் விவாதக் குழு சார்பில் நம்பியூர் வட்டம், மொட்டனம், எம்மாம்பூண்டி, செல்லாண்டாம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இந்தப் பிரசாரம் நடைபெற்றது. மலையப்பாளையம் உழவர் விவாதக் குழு அமைப்பாளர் கே.எம்.சுந்தரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன. மலையப்பாளையம் விஏஓ தமிழரசன், மாவட்ட உழவர் விவாத குழு செயலாளர் பாமா வெங்கடாசலபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.