ஈரோடு பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு மாவட்டத்தில் மெகா மேளா செவ்வாய்க்கிழமை (ஏப்ரல்16) நடைபெறவுள்ளது.
புதிய 4 ஜி சிம்களை தங்கள் தேவைக்கேற்ற பிளான்களான நேசம் கோல்டு, மினிட்- செகண்ட் போன்றவை மூலம் பி.எஸ்.என்.எல் இணைப்பை தேர்வு செய்யலாம். பிற நிறுவன இணைப்பில் இருந்து எண்ணை மாற்றாமல் எம்.என்.பி மூலம் பி.எஸ்.என்.எல் நிறுவன இணைப்புக்கு மாற்றலாம்.
ஈரோடு தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.