குடிநீர்க் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல்

ஈரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.

ஈரோட்டில் குடிநீர் குழாய் பதிக்க குழி தோண்டுவதற்கு வெடி வைத்ததால் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
ஈரோடு மாநகராட்சிப் பகுதிக்கு சுகாதாரமான குடிநீர் விநியோகம் செய்வதற்காக ஊராட்சிக் கோட்டையில் உள்ள காவிரி ஆற்றில் தண்ணீர் எடுத்து விநியோகம் செய்யப்படவுள்ளது. இந்தக் கூட்டுக் குடிநீர்த் திட்டத்துக்கான பணிகளை செயல்படுத்த பல்வேறு இடங்களில் குடிநீர்க் குழாய்கள் பதிக்கப்பட்டு வருகின்றன. ஈரோடு, ஆர்.என்.புதூர் பகுதியில் குடிநீர்க் குழாய் பதிப்பதற்காக பொக்லைன் இயந்திரம் மூலமாக ஆழமான குழிகள் தோண்டப்படுகின்றன. பின்னர் கிரேன் உதவியுடன் பெரிய குழாய்கள் பதிக்கப்பட்டு குழிகள் மூடப்படுகின்றன.
 பாறைகளாக இருக்கும் பகுதியில் வெடி வைத்து குழி தோண்டப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் அந்தப் பகுதியில் உள்ள ஒரு சில வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன.
இதுகுறித்து அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது: 
ஆர்.என்.புதூர் பகுதியில் குடிநீர்க் குழாய் பதிக்க குழி தோண்டப்படுகிறது. பாறைகளாக இருப்பதால் வெடிவைத்து குழியைத் தோண்டுகின்றனர். இதனால் வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளன. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தோம். அவர்கள் வந்து பார்வையிட்டு உரிய இழப்பீடு கொடுப்பதாக தெரிவித்தனர்.  ஆனால் இதுவரை இழப்பீடு தரவில்லை. எனவே குழியைத் தோண்ட வெடியை பயன்படுத்துவதற்கு பதிலாக கற்களை உடைக்கும் இயந்திரத்தை பயன்படுத்தி குழியை தோண்ட வேண்டும் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com