மக்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக கூட்டணி: அன்புமணி

மக்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக கூட்டணி என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 

மக்கள் நலனில் அக்கறை கொண்டது அதிமுக கூட்டணி என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். 
திருப்பூர் மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் எம்.எஸ்.எம்.ஆனந்தனுக்கு ஆதரவு கோரி பவானியில் அந்தியூர் மேட்டூர் பிரிவில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்துப் பேசினார்.
இக்கூட்டத்தில் பங்கேற்ற அன்புமணி ராமதாஸ் பேசியதாவது : 
காவிரி நதிநீர் பங்கீட்டில் தமிழகத்துக்கு திமுக, காங்கிரஸ் கட்சிகள் துரோகம் செய்தன. இதனால் கர்நாடகத்தில் 4 அணைகள் கூடுதலாகக் கட்டப்பட்டதால், தமிழகத்துக்கு கிடைக்க வேண்டிய தண்ணீரின் அளவு குறைந்து போனது. அதிமுக கூட்டணியில் போட்டியிடும் அனைவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். விவசாயிகளின் துயரங்களை அறிந்தவர்கள். திமுக தலைவர் ஸ்டாலினுக்கோ, வைகோவுக்கோ விவசாயம் குறித்து எதுவும் தெரியாது. அதிமுக அமைதியான கூட்டணி. திமுக கூட்டணி அராஜகம், கட்டப் பஞ்சாயத்து கூட்டணி. எதிர்க்கட்சியாக உள்ளபோதே திமுகவினர் அராஜகம் செய்கின்றனர். கடந்த 50 ஆண்டுகால கோரிக்கையான தோனிமடுவு திட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நிறைவேற்றுவதாக உறுதியளித்துள்ளார். மணியாச்சி பள்ளம் திட்டத்ததால் ஏரி, குளங்களில் தண்ணீரை சேமிக்க முடியும். நீட் தேர்வு வருவதற்கு திமுகவும், காங்கிரஸ் கட்சியுமே காரணம். அதேபோல் ஹைட்ரோ கார்பன் திட்டம், மீத்தேன் வாயுத் திட்டம், ஸ்டெர்லைட் ஆலை உள்ளிட்ட திட்டங்கள் வருவதற்கும் திமுகதான் காரணம். தற்போது மக்களை ஏமாற்றும் வகையில் திமுக போராட்டம் நடத்தி வருகிறது என்றார். 
அந்தியூர் சட்டப் பேரவை உறுப்பினர் ஈஎம்ஆர். ராஜா,  ஈரோடு மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கித் தலைவர் என்.கிருஷ்ணராஜ், பாமக மாநிலத் துணைப் பொதுச் செயலர் மு.வேலுசாமி, மாவட்டத் துணைச் செயலர் அ.பெ.முருகானந்தம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com