அமரபணீஸ்வரர் கோயில் தேர்த் திருவிழா

கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோயிலான அமரபணீஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


கோபி பாரியூர் கொண்டத்துக்காளியம்மன் வகையறா கோயிலான அமரபணீஸ்வரர் கோயில் சித்திரைத் தேர்த் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சித்திரைத் தேர்த் திருவிழா ஏப்ரல் 16 ஆம் தேதி துவங்கியது. பின்னர் வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், கொடியேற்றம், திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. வெள்ளிக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. அப்போது, சௌந்தர்நாயகி அம்மனுடன், அமரபணீஸ்வரர் திருத்தேரில் பவனி வந்தார்.
கோபி, பச்சைமலை, மொடச்சூர், புதுப்பாளையம், கரட்டூர், முருகன்புதூர், வெள்ளாளபாளையம் பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருவிழாவில் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com