அமர்வு வாலிபால் அணி வீரர்கள் கெளரவிப்பு

மலேசியாவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அமர்வு வாலிபால் போட்டியில் இந்திய அணி சார்பில்

மலேசியாவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான அமர்வு வாலிபால் போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்ற ஈரோட்டைச் சேர்ந்த 2 வீரர்களை மாவட்ட ஆட்சியர் வாழ்த்தினார். 
மலேசிய அமர்வு வாலிபால் கழகம் சார்பில், மாற்றுத் திறனாளிகளுக்கான அமர்வு வாலிபால் போட்டி மலேசியாவில் அண்மையில் நடைபெற்றது.  இந்தியா-மலேசியா நாடுகளுக்கு இடையே நட்புறவு அடிப்படையில் நடந்த இந்தப் போட்டியில் இந்திய ஆண்கள் அணி சார்பில் 12 பேரும், பெண்கள் அணி சார்பில் 12 பேரும் கலந்து கொண்டனர்.  இதில் ஆண்கள் அணியில் இடம்பெற்ற 12 பேரில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 
இவர்களில் பச்சமுத்து, மோகன் ஆகிய 2 பேர் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.  இவர்கள் இருவரும் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவனை வெள்ளிக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அவர்களுடன் தமிழ்நாடு அமர்வு வாலிபால் கழகத் தலைவர் மக்கள் ஜி.ராஜன் உடனிருந்தார்.
இதுகுறித்து பச்சமுத்து, மோகன் ஆகியோர் கூறியதாவது: 
பாரா ஒலிம்பிக்கில் இடம்பெற்றிருக்க கூடிய அமர்வு வாலிபால் அணிகளுக்கு அரசு உதவி செய்தால் வரக்கூடிய பாரா ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கப் பதக்கம் வாங்கிக் கொடுப்போம் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com