சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள கடம்பூர் மலைப் பகுதி மாக்கம்பாளையம் கோம்பையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சிக்குமாதையன் (65). விவசாயக் கூலித் தொழிலாளியான இவர், அப்பகுதியில் உள்ள சாலையில் வியாழக்கிழமை இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனம், சிக்குமாதையன் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த சிக்குமாதையனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு வெள்ளிக்கிழமை கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கடம்பூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.