தெரு விளக்குகளை சீரமைக்க கோரிக்கை

சிவகிரி அருகே கோட்டைப்புதூரில் பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 

சிவகிரி அருகே கோட்டைப்புதூரில் பழுதடைந்த தெருவிளக்குகளை சீரமைத்து தர வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். 
இதுகுறித்து ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கு சிவகிரியை அடுத்த கோட்டைப்புதூர் முன்னாள்  கவுன்சிலர் முருகேசன் மற்றும் ஊர்ப்பொதுமக்கள் அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது: 
மொடக்குறிச்சி மற்றும் கொடுமுடி ஒன்றிய எல்லையில் அமைந்துள்ள  கோட்டைப்புதூர் கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு தெருவிளக்குகள் சரிவர பராமரிக்கப்படுவதில்லை.  மின்வாரிய ஊழியர்கள் இந்த ஊரை கண்டுகொள்வதில்லை. இதுகுறித்து மின்வாரியம், பேரூராட்சி நிர்வாகத்திடமும் புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. 
பெண்கள், குழந்தைகள் இரவு நேரங்களில் நடமாட அச்சப்படுகின்றனர். இங்குள்ள மின்கம்பங்களில் பழுதடைந்த விளக்குகளை அகற்றி புதிய விளக்குகளை பொருத்துவதில்லை. பழைய விளக்குகளையே பழுதுபார்த்து பொருத்துவதால், இரண்டு அல்லது மூன்று நாள்களில் மீண்டும் பழுதடைந்து விடுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவருக்கும் மனு அனுப்பியுள்ளோம். உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால்  ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். எனவே, கோட்டைப்புதூர் கிராமத்தில் பழுதடைந்த மின்விளக்குகளை உடனடியாக மாற்றித் தரவேண்டும் என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com