தேசிய எலும்பு, மூட்டு தின விழிப்புணர்வுப் பேரணி

ஈரோட்டில் தமிழ்நாடு எலும்பியல் மருத்துவர் சங்கம் சார்பில் தேசிய எலும்பு, மூட்டு தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடந்தது.

ஈரோட்டில் தமிழ்நாடு எலும்பியல் மருத்துவர் சங்கம் சார்பில் தேசிய எலும்பு, மூட்டு தின விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடந்தது.
 ஈரோடு, பெருந்துறை சாலை, காளிங்கராயன் விடுதியில் இருந்து தொடங்கிய பேரணியை சங்கத்தின் முன்னாள் மாநிலத் தலைவர் டாக்டர் எஸ்.நடேசன் துவக்கி வைத்தார். பெருந்துறை சாலை வழியாக வந்து, சம்பத் நகர் இந்திய மருத்துவர் சங்கக் கட்டடத்தில் பேரணி முடிவடைந்தது.
முதியோருக்கு எலும்புக் குறைபாடு, மூட்டுத் தேய்மானம் போன்ற பிரச்னைகள் அதிகமாக உள்ளன.  உடலுழைப்பு, ஆரோக்கிய உணவு, மருத்துவ ஆலோசனை மூலம் இவற்றைச் சீரமைப்பது குறித்த விழிப்புணர்வுப் பதாகைகளை பேரணியில் பங்கேற்றோர் ஏந்திச் சென்றனர். செயலாளர் கண்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com