பவானி பகுதியில் 7இல் மின் குறைதீர் கூட்டம்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம், கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில் பவானி பகுதியில்

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் விநியோக கழகம், கோபி மின் பகிர்மான வட்டம் சார்பில் பவானி பகுதியில் உள்ள மின் உபயோகிப்பாளர்களுக்கான மாதாந்திர குறைதீர் கூட்டம் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) நடைபெறவுள்ளது. 
பவானி ஊராட்சிக்கோட்டை மேட்டூர் பிரதான சாலையில் உள்ள தமிழ்நாடு மின்  உற்பத்தி மற்றும் விநியோக கழக செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஆகஸ்ட் 7) காலை 11 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ள இந்தக் கூட்டத்தில் கோபி மின் பகிர்மான வட்டம் மேற்பார்வைப் பொறியாளர் கலந்துகொண்டு குறைகளைக் கேட்டு நடவடிக்கை எடுக்க உள்ளார். 
எனவே,  பவானி கோட்ட பகுதிக்குள்பட்ட மின் நுகர்வோர்கள் தங்களது மின்சாரம்  சம்பந்தமான குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம்.   இத்தகவலை கோபி மின்பகிர்மான வட்டம் மேற்பார்வை பொறியாளர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com