மாவட்ட அளவிலான செஸ் போட்டியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த 250 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
ஈரோடு பிரவின் செஸ் அகாதெமி சார்பில் 4 ஆம் ஆண்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவியருக்கான செஸ் போட்டிகள் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் 17 பள்ளி மற்றும் கல்லூரிகளைச் சேர்ந்த 250 பேர் கலந்து கொண்டனர்.
இதில் 7, 10, 13, 25 ஆகிய வயதுக்குள்பட்ட பிரிவுகளில் 5 சுற்றுகளாகப் போட்டிகள் நடந்தன. ஐந்து சுற்றுகளில் அதிகப் புள்ளிகள் எடுத்த ஒவ்வொரு பிரிவிலும் 30 பேர் என நான்கு பிரிவுகளில் மொத்தம் 122 பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு, மாவட்ட செஸ் சர்க்கிள் செயலாளர் ரமேஷ் சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் போட்டி ஒருங்கிணைப்பாளர் பிரவின் குமார் உள்ளிட்ட அமைப்பின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.