ஈரோடு மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை: பவானிசாகரில் அதிகபட்சமாக 32.4 மி.மீ. பதிவு

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் பரவலாக வெள்ளிக்கிழமை சாரல் மழை பெய்தது. இதில் பவானிசாகரில் அதிகபட்சமாக 32.4 மி.மீ. மழை பதிவானது.
கேரள மாநிலத்தில் பருவ மழை தீவிரம் அடைந்துள்ளதால் கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் ஈரோடு மாவட்டத்திலும் கடந்த இரண்டு நாள்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
இதில் பவானிசாகர் பகுதியில் அதிகப்பட்சமாக 32.4 மி.மீ. மழை பதிவானது.
இதேபோன்று, வியாழக்கிழமை இரவு மொடக்குறிச்சி, கொடுமுடி, பவானி, அந்தியூர் உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்ததுள்ளது. ஈரோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்யாவிட்டாலும் சாரல் மழை பெய்தது. 
பெருந்துறை, சென்னிமலையில் இரண்டு நாள்களாக மழை தொடர்ந்தது. அவ்வப்போது காற்றும் வீசியது. மேக மூட்டத்துடன் குளிர்ச்சியான சீதோஷண நிலை காணப்பட்டது. 
ஈரோடு மாவட்டத்தில் வியாழக்கிழமை பெய்த மழை அளவு : (மில்லி மீட்டரில்) 
பவானிசாகர் - 32.4, நம்பியூர் - 24, சத்தியமங்கலம் - 23, கொடிவேரி- 23, சென்னிமலை -13, மொடக்குறிச்சி - 12, தாளவாடி - 12, கோபி - 11, எலந்தகுட்டைமேடு - 10.4, வரட்டுப்பள்ளம் - 9.6, பெருந்துறை- 9, கொடுமுடி- 8.8, குண்டேரிப்பள்ளம் - 7.2, கவுந்தப்பாடி - 6, அம்மாபேட்டை - 4.4, பவானி - 4.2, ஈரோடு -3.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com