பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோட்டில் ரயில்வே தொழிற் சங்கத்தினர் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு ரயில் நிலையம் முன்பாக டிஆர்இயூ தொழில்சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சேலம் கோட்ட உதவித் தலைவர் சுப்பிரமணியன் தலைமை வகித்தார். மண்டல உதவிச் செயலர் முருகேசன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.
அதில் ரயில்வேயின் தொழிற்சங்க அங்கீகாரத்துக்கான ரகசிய வாக்கெடுப்பு தேர்தல் திட்டமிட்டபடி நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தேர்தல் நடத்தை விதிமுறைகளை இறுதிப்படுத்த வேண்டுவது என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.