தபால் நிலையம் முற்றுகை: எஸ்டிபிஐ கட்சியினர் 88 பேர் கைது

ஈரோடு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 88 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 

ஈரோடு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 88 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர். 
தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம், காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு தலைமை தபால் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது ஹசன் அலி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். 
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 21 பெண்கள் உள்பட 88 பேரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com