ஈரோடு தலைமை தபால் நிலையத்தை முற்றுகையிட முயன்ற எஸ்டிபிஐ கட்சியைச் சேர்ந்த 88 பேரை போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.
தகவல் அறியும் உரிமைச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம், காஷ்மீர் மாநிலத்தில் 370 சட்டப் பிரிவு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து ஈரோடு தலைமை தபால் நிலையத்தை எஸ்டிபிஐ கட்சியின் மாவட்டத் தலைவர் முகமது ஹசன் அலி தலைமையில் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதையடுத்து, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் போராட்டத்தில் ஈடுபட முயன்ற 21 பெண்கள் உள்பட 88 பேரைக் கைது செய்தனர்.