பெருந்துறை ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
விழாவுக்கு, பள்ளித் தலைவர் டி.சி.கே.சின்னசாமி தலைமை வகித்தார். தாளாளர் எல்.சென்னியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் கே.எஸ்.சுப்பிரமணியன் வரவேற்றார். விழாவையொட்டி, பள்ளிக் குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடம் அணிந்து வந்திருந்தனர். கிருஷ்ண ஜயந்தியைப் பற்றி குழந்தைகள், தங்கள் கருத்துகளை மழலை மொழியில் எடுத்துரைத்தனர். குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
இதில், பள்ளியின் பொருளாளர் சி.ஆர்.மாணிக்கமூர்த்தி, பள்ளி இணைச் செயலாளர்கள் கலாதேவி, கீதா, ஆசிரியர்கள், பெற்றோர் கலந்துகொண்டனர்.